வழக்கறிஞர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
திருச்சி, மர்ச் 11: திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன
அதன் தொடர்ச்சியாக நான்காம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் 10/3/2025 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது
இந்த முகாமில் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் உறவினர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.