ஸ்ரீ ஐயப்பன் ரத ஊர்வலம் தமிழகம் முழுவதும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம்
திருச்சி, ஜன,17: சபரிமலை ஐயப்பன் சாஸ்தா சன்னதியில் ஹரிவராஸனம் இறைகானம் இசைக்க ஆரம்பித்து நூறாண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில்
ஸ்ரீ ஐயப்பன் ரத ஊர்வலம் தமிழகம்முழுவதும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு அதன் பகுதியாக வரகனேரி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ரதம் வந்தது
அதை தொடர்ந்து ஸ்ரீ சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாவட்டத் தலைவர் பொன்னம்பலம். குணசீலன் தலைமையில் சமாஜத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரத்தினவேல் , பராங்குச ராமானுஜ தாஸன், வைத்தியர் சீனிவாச பிரசாத் ஆகியோர் முன்னிலையிலும்
சிறப்பு வழிபாடு பூஜையும் ஆராதனையும், மற்றும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் இளைஞர் அணி அமைப்பாளர் சேகர் மற்றும் அவரது குழுவினர் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அப்பகுதி பொதுமக்கள் ஆண்கள், பெண்கள், முதியோர்கள், குழந்தைகளுடன் வந்து சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்,
இந்த ரத யாத்திரையை ஹரிவராஸனம் நூறாண்டு விழா கமிட்டியின் தென் தமிழ்நாடு தலைவரும்தினமலர் ஆசிரியருமான முனைவர்,ராமசுப்பு, 27/11/2022 தொடங்கி வைத்தார், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொடங்கப்பட்டடு தமிழகம் முழுவதும் ரத ஊர்வலமாக செல்ல உள்ளதாக, என்று தெரிவித்தனர்.