ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 ரயில்வேயைக் காப்போம் தேசத்தைக் காப்போம் முழக்கத்துடன் எஸ் ஆர் எம் யு சார்பில் ஆர்ப்பாட்டம்,


திருச்சி,ஆகஸ்ட்,9:                               திருச்சி ரயில்வே ஜங்ஷன்பகுதியில் எஸ் ஆர் எம் யூ சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்ஆர்எம்யூ தலைவர் கண்ணையா வழிகாட்டுதலின்படி, மத்திய சங்கத்தலைவர், ராஜா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரத் கொளரவ் என்ற பெயரில் 150 விரைவு ரயில்களையும், வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை உடனே கை விடு,பணமாக்கல் என்ற பெயரில் ரயில் நிலையங்கள் இன்பாதை அமைப்புகள் கொங்கன் ரயில்வே சரக்கு நிலையங்கள் சரக்கு பாதை உற்பத்தி பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சொத்துக்களை விற்காதே ரயில்வே தொழிலாளர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்து குறுகிய கால ஒப்பந்த ஊழியர்களை புகுத்தாதே,


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் 2004க்குமுந்தைய ஓய்வூதியத்தை அனைவருக்கும் வழங்கிடு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வேயைக் காப்போம் தேசத்தைக் காப்போம்  என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் எஸ் ஆர் எம் யூ நிர்வாகிகள் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்,

Post a Comment

Previous Post Next Post

Contact Form