திருச்சி மணிகண்டம் கீழ பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60) இவரது மகன் சந்தோஷ் (வயது 24). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஐந்து வருடகாலமாக அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் அந்தப் பெண் வீட்டாருக்கு தெரியவரவே பெண்ணின் அண்ணன் இந்த காதலுக்கு ஏதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சந்தோஷ்யிடம் என் தங்கையுடன் பழகாதே என்று எச்சரித்துள்ளார்.
ஆனால் சந்தோஷ் தொடர்ந்து காதலித்து வந்துள்ளர் சந்தோஷ் இதை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் 12/7/2021. இன்று காலை சந்தோஷ் காதல் செய்யும் காதலியின் அண்ணன் ஆனந்த் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷை அரிவாளால் வெட்டியுள்ளனர்
இதனால் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் சந்தோஷை
திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறுசந்தோஷ் குடும்பத்தார் தெரிவித்தனர் இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.