திருநங்கைகளின். திருஅவள் அமைப்பினர் சார்பாக:பாதாம் பால் மற்றும் பிரட் வழங்கப்பட்டது
திரு அவள் அமைப்பு சார்பாக திருநங்கைகள் இணைந்து சாலையோர மக்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தினசரி மதிய உணவுகளை வழங்கி வருகின்றன திருஅவள் குழவின் ரியானா, தலமையில்.
ஊரடங்கு காரணமாக அதிகமான மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி வறுமையில் உள்ள எழை எளிய மக்களுக்கும் அதேபோல் சாலையோர மக்களும் உணவு கிடைக்காமல் சிரமப்படுகின்றவர்களுக்கும் தினசரி மதிய உணவு வழங்க வேண்டும் என்ற உணர்வோடு பொருளாதாரத்தை திரட்டி தினசரி உதவி செய்து வருகின்றனர் அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் உள்ள
நோயாளிகளுக்கு மற்றும் பணி புரியும் செவிலியர்களுக்கும் பாதாம் பால் பிரெட் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டது இதனை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ அலுவலர் எம்.எஸ். கோபிநாத். நம்பிக்கை மையத்தின் ஆலோசகர்.விமல் ஆரோக்கியமேரி, ஆகியோர் தொடங்கி வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில்
திரு அவள் அமைப்பின் குழுவினர்.நமீதா, உமா, மாயா,பர்வின், ஸ்டெபி,ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் வழங்கினர்