அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர்க்கு சமூக போராளி டிராபிக் ராமசாமி விருது!
சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா திருச்சி சுருதி மஹாலில் நடைபெற்றது.
ஒயிட் ரோஸ் பொதுநலச் சங்கத் தலைவர் முனைவர் சங்கர் வரவேற்றார். ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்க தலைவர் மோகன்ராம் தலைமை வகித்தார். தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் மனித விடியல் மோகன், ஈகை சிறகுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது ஷபி, ஸ்ரீரங்கம் நகர் நல சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாசலம், மூத்த சமூக ஆர்வலர் கோவிந்தசாமி, கன்மலை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வில்பர் எடிசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை செயலர் ஜவகர் ஹசன், பொருளாளர் இளங்கோவன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிழக்கு கிளை தலைவர் சுப்பிரமணியன், தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் முரளி கிருஷ்ணன், பொறியாளர் ஜெயபால் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஸ்கோப் தொண்டு நிறுவன நிறுவனர் பத்மஸ்ரீ மாராச்சி சுப்புராமன்,
மயான பூமியில் மனைவி மகளுடன் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு சமூக போராளி டிராபிக் ராமசாமி விருதினை வழங்கினார்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார். மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் மகள் கீர்த்தனா விஜயகுமார் குடும்பம் சகிதமாக உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருவது குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
மயான பூமியில் மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனா உள்ளிட்டோருடன் இணைந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறோம். மரணமானது துயரத்தின் உச்சம் ஆகும். இறந்தவரின் உடலை அவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களுக்கோ, ஊருக்கோ, உறவினர்க்கோ தகவல் கொடுக்க முடியாமல் உரிமை கோரப்படாத உடல்கள் ஏராளம். இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருகிறோம். மரணம் ஒன்று தான். சம்பவங்கள் பல. இதன் வலியும் வேதனையும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.ரயில் விபத்தில் பலியாகி மூட்டையாய் வந்ததும் உண்டு.
ஆற்று மதகில் ஊறிய நிலையில் கிடந்த உடலும் உண்டு. பிச்சை எடுத்து ஜீவனம் நடத்திய ஆண், பெண் பேருந்து நிறுத்தத்திலோ, சாலை ஓரத்திலோ இறந்தவர்களும் உண்டு. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு சென்றவர்களும் உண்டு.
சாலை விபத்தில் பலியானவர்களும் உண்டு.தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. ரயில் இருப்புப் பாதையில் விபத்தில் இறந்தவர்களும் உண்டு.அனாதை பிணங்கள் பெயர், விலாசம் தெரியாமலும் உடலை யாரும் உரிமை கோராமல் இருப்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவரும். புராண, இதிகாச காலம்தொட்டு மயானங்களில்
இந்து மதத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் சுடுகாட்டில் அல்லது உடலை புதைக்கும் இடுகாட்டில் ஆண்கள் தான் இறுதி காரியங்களை செய்து வருவார்கள். பெண்கள் வீட்டில் காரியங்களை செய்வதோடு சரி.
சுடுகாட்டில், மயானத்தில் காரியங்கள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவர் அல்லது பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்களின் உடலுக்குக்கூட அந்த இடத்தில் இறுதியாக முகத்தை கூட பார்க்க அனுமதிக்கப்படாத இந்த உலகில் கணவருடன் இணைந்து இயன்ற சூழலில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை அச்சமின்றி அடக்கம் செய்து வருகிறோம். மனைவி திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்
மகள் கீர்த்தனா வழக்கறிஞர் பட்டப்படிப்பினை படித்து வருகிறார். கீர்த்தனா புற்றுநோயாளிகளுக்காக தலை முடியையும் தானம் செய்து உள்ளார்.உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் வறுமை மாறாமல் தொடா்கிறது.கொடிது கொடிது வறுமை கொடிது வறுமையின் விளைவை களப் பணியால் அறிந்து பசிப்பிணியை போக்க தினசரி உணவகங்களில் உபரியாகும் உணவினை பெற்று வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் ஆண்டு தோறும் உணவளித்து வருகிறோம். ‘ஏழ்மையான பொருளாதாரத்தாலோ முதுமை மற்றும் நோயின் அடிப்படையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு சாலையோரங்களிலேயே உண்டு உறங்கி கையேந்தி பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி மருத்துவ சிகிச்சை இன்றி உடல் நலம் குன்றி குற்றுயிராக உருக்குலைந்து அழுக்கு படிந்த உடல், ஏக்கம் நிறைந்த கண்கள், கறை படிந்த பற்கள், கிழிந்த உடையுடன் சாலை ஓரங்களிலேயே இறந்து போய் விடுகிறார்கள்.இவர்கள் போதிய பண வசதி இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருவது எங்களது களபணியில் தெரிந்து கொண்டுள்ளோம்..உற்றார் உறவினர் சகோதர சகோதரிகள் உதாசீனத்தால் உறவின்றி பொது மக்களிடம் கையேந்தி வாழ்க்கையினை நடத்துகின்றனர்.பலர் ஏளனத்திற்கு ஆளானவர்கள் படும் கோபம், வேதனை, துக்கம், துயரத்தால் இவர்கள் நிம்மதியாக தூங்கவோ, வேலை செய்யவோ அல்லது சாப்பிடவோ முடிவதில்லை. இவர்களது வேதனைக்கு முக்கியக் காரணியாய் அமைவது உடல்நலக் குறைவும் முதுமையும் தான்.
மிகவும் ஏழ்மையான வா்க்கத்தைச் சோ்ந்தவர்கள் சாப்பிடுவதை குறைத்தும், ஒரு வேளை சாப்பிடுவதை முற்றிலும் தவிா்த்தும் உள்ளனா் . இதனால் இவா்களின் மகிழ்ச்சியும் காற்றோடு கலந்து விடுகிறது. ஏன் அடிப்படை உரிமைகளான வீட்டை இழந்து குடும்பத்தை மறந்து தங்களின் சமூகப் பிணைப்பில் இருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்வை வாழ்கின்றனா்.
இப்படி வறுமையில் வாழும் அவா்களின் துன்பங்களும் துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். எப்படி இருப்பினும் இன்னும் வறுமை தீா்ந்தபாடில்லை தொடர்கிறது. மனைவி மகளுடன் இணைந்து அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். அனாதையாக இறப்பவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை.
மலர் மாலை அணிவிக்க யாருமில்லை.
இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை.
பிணத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.நாங்கள் சுயநலம் பார்க்காமல் பொதுநலன் சார்ந்ததாகவே உரிமை கோரப்படாத அனாதை பிணங்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கினை செய்து மனித நேயத்துடன் நல்லடக்கம் செய்கிறோம்.
உரிமை கோரப்படாத அனாதை பிணங்கள் சம்பந்தப்பட்ட சரக காவல்துறையினர் தரும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சரக காவல்துறையினரின் முன்னிலையில் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்வோம்.கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனாதையாக இறப்பவர்களுக்கு யார் உதவுகிறோம் என்பதும் தெரியாது. நாங்கள் யாருக்கு உதவுகிறோம் என்பதும் எங்களுக்கு தெரியாது. நான் என் வாழ்நாளிற்கு பிறகு மனைவி, மகள் ஒப்புதலுடன் திருச்சி கிஆபெ விசுவநாதன் மருத்துவக் கல்லூரிக்கு உடலை தானமாக வழங்க உறுதி ஏற்று பதிவு செய்துள்ளேன் என்றார். நிறைவாக டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற நிறுவனர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.