பூத் கமிட்டி, மகளிர் குழு மற்றும் இளைஞர் பாசறை குழுக்களை இன்று ஆய்வு செய்தனர்
திருச்சி, நவ, 16: அதிமுக கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடியார் உத்தரவின் கிழ் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. ஆகியோர் மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்குட்ட மணிகண்டம், பாகனூர், மேக்குடி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி, மகளிர் குழு மற்றும் இளைஞர் பாசறை குழுக்களை இன்று ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணிகண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துக்கருப்பன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழக இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், தொழிற்சங்கம் ஜெகதீசன், ஸ்ரீரங்கம் நடேசன், ஜெயம் ஸ்ரீதர், சமயபுரம் சுந்தரமூர்த்தி, நல்லுசாமி, சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ரஜினிகாந்த், தமிழழகன், சேகர்மணி, பழனிசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.