மர்ம கட்டியால் இயல்பு வாழ்க்கை இழந்து கண்ணீர் மல்க பேட்டி


 மர்ம கட்டியால் இயல்பு வாழ்க்கை இழந்து கண்ணீர் மல்க பேட்டிஎதிர்காலம் கேள்விகுறியான நரிகுறவர் இன பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க அரசு உதவிட வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை....


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி தேவராயநேரி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ். மணிகள், பாசி மாலைகளை விற்று அன்றாடம் அதில் கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளார். மூத்த மகளுக்கு திருமணம் முடிக்கப்பட்டுள்ளது. இளைய மகள் ஹரிணி வயது 18. நரிகுறவர் இன பெண்ணான இவர் திருவெறும்பூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்  பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு  விடுமுறையில் இருந்த நாட்களில் இவருக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது.பின்னர் நாளடைவில் கழுத்து பகுதியில் சிறிய மர்ம கட்டி ஒன்று வளர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று வந்தனர்.இதில் ஹரிணி குணமடையாமல் அவரது கட்டி நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று வந்தனர்.தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக கடந்த ஜனவரி மாதம் சென்றனர்.  அப்போது அங்கு அவர் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வீடு திரும்பினார்.இதேபோல் மருத்துவர்கள் கூறும் நாட்களில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.மருத்துவர்கள் அதற்குரிய பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களாக அந்த மர்ம கட்டி குணமடையாமல் அந்த இளம் பெண் அவதிப்பட்டு வருகின்றார். மேலும் அவர் உட்கொள்ளும் மருந்துகளின் விளைவால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, தலையில் முடிகள் உதிர்ந்து வருவதாகவும், தன்னுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து பெரும் அவதிப்பட்டு வருவதாக அந்த பெண் தெரிவித்தார்.குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் குடும்பம் சூழல் உள்ளது.மேலும் இந்த பெண் விரைவில் சிகிக்சை பெற்று கட்டி குணமடைந்து பாதியில் நின்ற படிப்பை தொடர்ந்து படித்து சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்பதே அந்த பெண்ணின் விருப்பம். இதற்காக பெண்ணின் சிகிச்சைக்கு அரசு  முன் வந்து உதவிட வேண்டுமென பெற்றோர் மற்றும் மர்ம கட்டியால் பாதிக்கப்பட்ட ஹரிணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form