திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனிமைப்படுத்தப்பட்ட
சிறப்பு மருத்துவ முகாம்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சை
பெற்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்தது தொடர்பாக மாவட்ட
ஆட்சித்தலைவர் .சு. சிவராசு, தகவல்.
இன்று (30.05.2021) திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று
வந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 90 நபர்களும், பெரம்பலூர்
மாவட்டத்தைச் சேர்ந்த 02 நபாகள் என 92 நபர்களும், தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு
மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வந்த 34 நபர்களும் பூரண குணமடைந்து
டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
80
லேசான நோய் தொற்று அறிகுறியுடன்
வீட்டில்
தனிமைப்படுத்தப்பட்டிருந்த
நபர்கள் பூரண குணமடைந்துள்ளனர். ஆக மொத்தம்
206 நபர்கள்
பூரண
குணமடைந்துள்ளனர்.
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
விழித்திரு விலகி இரு வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க வேண்டும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக
மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்று கேட்டுகொண்டார்