திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அறிக்கை:-
திருச்சி, ஆகஸ்ட், 26: அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார்,அவர்களின் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" எழுச்சி பயணம் திருச்சி மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பாக செயல்பட்டு நிகழ்ச்சியை வெற்றி பெற செய்த தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள், மகளிரணியினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கழக முன்னாள் அமைச்சரும்,திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் என்ற முறையில் அனைவருக்கும் நெஞ்சார்ந்த தெரிவித்துக் கொள்கிறேன். என்று மு.பரஞ்ஜோதி ,மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்