திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவருக்கு பாரம்பரிய காவலர் விருது
திருச்சி, செப், 26: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன் அரிஸ்டோ, கரூர் மாவட்ட நாணயவியல் மற்றும் அஞ்சல் இயல் சேகரிப்போர் சங்க தலைவர் ராஜு, நாணயவியல் சேகரிப்பாளர் அசோக் காந்தி முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியை திறந்து வைத்து,
திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சேவியர் சார்லஸ் சங்கத்தின் மூலமாக புதிய தலைமுறையினருக்கு நாணயங்களின் வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரத்தை எடுத்துரைப்பதை பாராட்டி பாரம்பரிய காவலர் விருதினை வழங்கினார்.