தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று திருச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது,
திருச்சி, மார்ச், 3: தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இம்மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன. இந்த போலியோ சொட்டு மருந்து முகாமின் முக்கிய அம்சங்கள்:
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது கிருமி நாசினி உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.
முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.
![]() |
| திருச்சி |
இதை தொடர்ந்து இன்று திருச்சியில் பல்வேறு முக்கிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
இதில் சுகாதார பணிகள் இயக்குநர் சுப்பிரமணியன், மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்,
திருச்சியில் 1580 மையங்கள் அமைக்கப்பட்டு 2.62. லட்சம் குழந்தைகளுக்கு .சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது இன்று விடுபட்ட குழந்தைகளுக்கு வருகின்ற ஐந்தாம் தேதி வரையிலும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது
இதில் பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தனர்.

