வேங்கூர் முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 59வது பொன்விழா ஆண்டு
திருச்சி, மே, 15: திருச்சி திருவெறும்பூர் கல்லணை அருகே உள்ள வேங்கூர்மேலத் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் 59 வது பொன்விழா ஆண்டு மற்றும் சித்திரை திருவிழா நடைபெற்றது,
இதில் அம்மனுக்கு பூச்செரிதல் விழா காப்பு கட்டுதல் கணபதி ஹோமம் காவேரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் காவடி பால் குடம் எடுத்து வந்தல் தீமிதி இறங்குதல் அபிஷேக ஆராதனை அன்னதானம் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் அம்மன் திருவீதி உலா அம்மனுக்கு விடையாற்றி விழா,
உள்ளிட்ட விழாக்கள் தொடர் நிகழ்வாக நடைபெற்றது,இதில் கோயில் நிர்வாகிகள் மேலத்தெரு வேங்கூர் கிராம பொதுமக்கள் உள்ளிட்டர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்