திருச்சி, மார்ச், 20: உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மகளிர் அமைப்புகள் மகளிர் தின விழா கொண்டாடி வருகின்றனர்,
அதன் ஒரு நிகழ்வாக திருச்சி மாவட்ட பச்சை மலையில் வழும் மலை வாழ் மக்களுடன் உலக மகளிர் தின விழா புதுவாழ்வு சமூக அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் அழகு ரோஜா தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதில் புதுவாழ்வு சமுக அறக்கட்டளை, லியோ அறக்கட்டளை மற்றும் சிகரம் அறக்கட்டளை இணைந்து மகளிர் தின விழா கொண்டாடினர்
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கங்காரு காப்பகத்தின் நிர்வாக இயக்குநர் தீபாராஜா, புதுசுவாசம் அறக்கட்டளையின் இயக்குனர் உமாமகேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்,
மேலும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள். மற்றும் நலத்திட்ட உதவிகள் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவின் முடிவில் லியோ அறக்கட்டளையின் இயக்குனர் ரூபினா, கிரிஜாகுமாரி நன்றியுரை கூறினார்
