திருச்சி, ஆகஸ்ட், 17: இந்தியத்திருநாட்டின் 75வது சுதந்திர தினவிழாவில் ஐக்கிய மக்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் தாவுத்சுல்தானா தலைமை ஏற்று தேசியக் கொடியினை ஏற்றினார்.
அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன்,மண்டல தலைவர்இருதயராஜ்,மாநில மகளிரணி மேரி,மாநிலத்துணைத்தலைவர் ஜெகதீசன்,மகளிரணி துணைத்தலைவி ஷமீம்,தலைவர்குருசாமி, ஐக்கிய மக்கள் நலச்சங்கத்தின்
துணைச்செயலாளர் கணேசன் மற்றும் குழந்தைகள் மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,
விழாவின் இறுதியில் ஐக்கிய மக்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் தாவுத் சுல்தானா அனைவருக்கும் மரக்கன்றுகளளை வழங்கினார்.