கடந்த புதன்கிழமை அன்று மறைந்த இந்திய முப்படை பாதுகாப்புத் தலைவர் தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு தியாகிகள் சதுக்கம் மலர் தளத்தில், அவரின் நினைவாக மலர்கள் சமர்ப்பித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மூத்த சமூக ஆர்வலர் வரகனேரி பொன். குணசீலன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் முகமது இப்ராகிம், ஏ திருப்பதி, மழபாடி வி ராஜாராம், டவுன் ஸ்டேஷன் முரளி, கே வெங்கட்ராமன், சிந்தாமணி டி ராஜா, வைர பாஸ்கரன், இரா கங்காதரன் காட்டூர் என் ராம லெஷ்மி ஆகியோர் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.