திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள இனாம் குளத்தூர் ஊராட்சி சின்ன ஆலம்பட்டி கிளை அதிமுக கழக செயலாளர் செல்வம் வீட்டில் நேற்று பெய்த கனமழையால் இடி விழுந்தது இதில் செல்வம் குடும்பத்தினர் பலத்த காயமடைந்தனர்.
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிழையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி சின்ன ஆலம்பட்டி கிளைக் கழக செயலாளர் செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை பெற்று வரும் செல்வத்தின் குடும்பத்தாரையும் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குநேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
இதில் எஸ்.பி.முத்துகருப்பன்ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்எல்.ஜெயகுமார், மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மாவட்ட கழக பொருளாளர் சேவியர்,முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள் சந்திரசேகர்,சேகர் மணி, இனாம் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளையம்மாள், பழனிசாமி,க.ரஜினிகாந்த்,ஐடி, ஒன்றிய செயலாளர்,மாத்தூர் குமார்கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.