மாற்றம் அமைப்பு சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

 


திருச்சி மாவட்டம் புறநகர் பகுதியான சமயபுரத்தில் மாற்றம் அமைப்பு மற்றும் கபாடி குழு பாய்ஸ் விளையாட்டு குழுவினர் சார்பில் இன்று 75 வது சுகந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாப்பட்டது  


நம்முடைய நாடு  சுகந்திரம் பெற பல தலைவர்கள் போராடி பலர் உயிர்தியாகம் செய்து நமக்கு இந்த சுதந்திரத்தை பெற்று தந்தனர் அவர்களின் தியாகம் விலைமதிப்பற்றது எனவே நாம் ஒவ்வொருவரும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட வேண்டும் இயற்கையை பாதுகாத்து மரங்களை வளர்த்து சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்று நிகழ்வில்  கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர் 


இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கும்  பொதுமக்களுக்கும் பழ வகைகளான மரகன்றுகளை வழஙங்கினார் 


இந்நிகழ்வில் சுபாஷ் ,கண்ணா, அஜித்,கணிஷ்,திலீப், சரண்,பிரபு, மதன்,மணி,பாண்டி, அஜய்,தர்ஷன் சத்தியேந்திரன், ராஜேஸ்வரி,கீர்த்தி, நாககண்ணி,சகுந்தலா,கணகவள்ளி,மற்றும் கலைபுயல் கபாடி குழு பாய்ஸ் விளையாட்டு குழுவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் 


நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரகன்றுகள் வழங்கப்பட்டு அப்பகுதியில்  மரகன்றுகள் நடப்பட்டது*

Post a Comment

Previous Post Next Post

Contact Form