வழக்கறிஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
திருச்சி டிச,2: பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது திருச்சியில் மழையின் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி
திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்
இந்நிகழ்வில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் P. V. வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார், இணைச் செயலாளர் விஜய நாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராமன் எழிலரசி மூத்த வழக்கறிஞர் விக்கிரமாதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.