தாய் நேசம் அறக்கட்டளை சார்பாக கிழக்குறிச்சி அரசு பள்ளி அருகில் நீர் மோர், தர்ப்பூசணி மற்றும் வெள்ளரிப்பிஞ்சுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..
திருச்சி மாவட்டம் கிழக்கு குறிச்சி பகுதியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழ வகைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இதில் அப்பகுதி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தலைவர் வழக்கறிஞர் வீரமணி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்,
இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் பயனடைந்தனர்... இந்நிகழ்ச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை குழுவின் அறங்காவலர்கள் நிறுவனர் ஹெப்சி சத்திய ராக்கினி, நன்கொடையாளி சுதா, சந்தான லட்சுமி, குளோரி, செந்தில்குமார், ஹரிசரன், கீர்த்தனா, அபிஷா போவாஸ் செல்வராஜ், ரஞ்சனா, சர்வேஷ் மற்றும் தாய் நேசம் அறக்கட்டளையில் பெரம்பலூர் 2 ம் பிரிவின் நிறுவனர் சத்யா, மதன், கிளாடி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்