நற்பகல் 12 மணி முதல் மூணு மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்

 நற்பகல் 12 மணி முதல் மூணு மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்நற்பகல் 12 மணி முதல் மூணு மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் 23.4.2024 மற்றும் 24.4.2024 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form