உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்

  வெள்ளாமை இயக்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு கிறிஸ்தவ சிறுபான்மையினர் கோரிக்கை.


திருச்சி, டிச, 10:                                திருச்சியில் கிறிஸ்தவ சிறுபான்மையினர்  வெள்ளாமை இயக்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது . இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்  தாஸ் பிரகாஷ் கூறும்போது தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை  கணக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள்  6.12% சதவீதமாகவும் இதில் 60% கிறிஸ்தவ பறையர்கள் ஆவார்கள் எனவும் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.4% சதவீதம்  தாங்கள் இருப்பதாகவும் ஆனால் அரசியல் கல்வி வேலை வாய்ப்பு சமூக பொருளாதார மற்றும் திருச்சபைகளில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் மேலும் தமிழ்நாட்டில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பறையர்கள் கூட தேர்வு செய்யப்படவில்லை என கூறினார், 

மேலும் மற்ற மதத்தில் சிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்குவது போல் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்  எனவும் கடந்த  2004 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதுவரை எந்த பயனும்  இல்லை  

தமிழ்நாட்டில்உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.4 %சதவீதமாக உள்ள கிறிஸ்தவ பறையர்கள் சார்பாக 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் ஆனால் தற்போது ஒருவர் கூட இல்லாதது சமூக அநீதி ஆகும்,

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தில் உள்ள பறையர்கள் பெரும்பான்மை தீர்மானிக்கக்கூடிய சட்டமன்ற தொகுதிகள் திருச்சி கிழக்கு ,லால்குடி, தஞ்சாவூர், திருவையாறு, திருவிடைமருதூர், வேலூர், விழுப்புரம், முகையூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், நீலகிரி, கம்பம், விக்கிரவாண்டி, ஆகிய தொகுதிகளில் இருந்தும் ஒன்றில் கூட சட்டமன்ற உறுப்பினராக இல்லாதது சமூக அநீதியாகும்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி வாழ்கின்றோம் இதற்கு காரணமாக உள்ள இட ஒதுக்கீடு இல்லை என்பது மிகப்பெரிய சமூக அநீதியாவும்,

கிருத்துவ மதத்தில் உள்ள ஆதிக்க சாதி என்று சொல்லக்கூடியவர்கள் மட்டும் சிறுபான்மையினருக்கான தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றது ஆனால் கிறிஸ்தவ மதத்தில் உள்ள பெரும்பான்மை பறையர்களுக்கு எந்த சலுகையும் பதவிகளும் வழங்கப்படுவதில்லை என்பது மிகப் பெரிய சமூக அநீதியாகும்.

மேலும் தங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் அனைத்து கிறிஸ்தவ அமைப்பினரும் ஒன்று சேர்த்து  வரும்  சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவ பறையர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தாங்கள் சுயேட்ச்சையாக போட்டி போட உள்ளதாக கூறினர்,

Post a Comment

Previous Post Next Post

Contact Form