கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதல் 6 பேர் உயிரிழப்பு!
திருச்சி, மார்ச், 19: சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர்கள்.ஓம்னி காரில் சேலத்தில் இருந்து கும்பகோணம் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது விறகு லோடு லாரி திருச்சியில் இருந்து நாமக்கல் சென்ற போது திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையம் திருவாசி அருகே லாரியும் ஓம்னி காரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காரில் பயணம் செய்த ஒன்பது நபர்களில் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்,
இறந்தவர்களில் 4 பேர் ஆண்கள்,ஒரு பெண், ஒரு குழந்தை. மொத்தம் 6 பேர்.இந்தத் துயரச் சம்பவம் பற்றி மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்,

