திருச்சியில் +2பொதுத் தேர்வை 34,392 மாணவ- மாணவியர் எழுதுகின்றனர் - உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள்.
திருச்சி, மார்ச், 13: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
+ 2 பொதுத்தேர்வுகள் மேல்நிலை இன்று 13ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 03ம்தேதி வரையிலும், +1க்குகான தேர்வு 14ம் தேதி நாளை துவங்கி அடுத்த மாதம் 05வரை நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் +2 மற்றும் +1பொதுத் தேர்வினை 260 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 133மையங்களில் தேர்வெழுத உள்ளனர்.
+2 தேர்வை 16,802 மாணவர்களும், 17,590 மாணவிகளும் என மொத்தம் 34,392 மாணவ மாணவியரும், +1பொதுத்தேர்வினை 14,088 மாணவர்களும், 16,678 மாணவிகளும் என மொத்தம் 30766 மாணவ / மாணவியர்களும்பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான அளவு இருக்கை வசதி,குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களுக்கான மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதியும் சார்ந்த துறை மூலமாக ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு பணியில் 133தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 133துறை அலுவலர்கள், 20வினாத்தாள் கட்டுப்பாளர்கள், 30வழித்தட அலுவலர்கள், 265 நிலையான, பறக்கும் படை உறுப்பினர்கள், 2407 தேர்வறை கண்காணிப்பாளர்கள் 229 சொல்வதை எழுதுபவர்கள், மற்றும் 275 அலுவலகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9முதல் மாணவ-மாணவி உற்சாகத்துடன் தேர்வு எழுதுவதற்காக மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்து தேர்வுக்கு தங்களை தயார் செய்தனர். மேலும் பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு மேலும் ஊக்கப்படுத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி சிந்தாமணியில் உள்ள இ.ஆர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தேர்வு நடக்கும் மையங்கள், கழிவறைகள், தேர்வு எழுதும் வகுப்பறைகளை பார்வையிட்டு மாணவர்கள் எந்தவித தயக்கமின்றி தேர்வு எழுத உற்சாகப்படுத்தியதுடன் வாழ்த்து தெரிவித்தார்.


