தனித்திறமையை மேம்படுத்தும் பயிற்சி கூடத்தை திறந்து வைத்த அமைச்சர் கேஎன் நேரு,
திருச்சி,மார்ச் 9:திருச்சி மாவட்டம் செம்பட்டு பகுதி என். எம்.டி காலனியில் மனிதம் குழந்தைகளுக்கு ஃபேமிலி பஸ்ட் டிரஸ்ட் மற்றும் மனிதம் டிரஸ்ட் மூலம் தொடங்கப்பட்ட தனித்திறமையை மேம்படுத்தும் பயிற்சி கூடத்தை நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்து குத்து விளக்கேற்றி சிறப்பித்தார்
இந்த நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மேயர் அன்பழகன், கவுன்சிலர் சுரேஷ்,மனிதம் டிரஸ்ட் நிறுவனர் . தினேஷ் குமார், ஃபேமிலி பஸ்ட் டிரஸ்ட் நிறுவனர் சிவகுமார் - சாவித்ரி, ராஜா,மனிதம் டிரஸ்ட் தாஸ், என்எம்டி. காலனி மக்கள், குழந்தைகள் மற்றும் மனிதம் சமூக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.