காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தடுக்க .மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபிஐ கட்சியினர். கோரிக்கை மனு
மத மோதல்களை தூண்டும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திருச்சியில் திரையிடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனவே அதை தடை செய்யகோரி எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு யிடமும்
எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட தலைவர் இமாம் அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் திருச்சி மாவட்ட காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர்யிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர் ஜமால் முகமது, மாவட்ட அமைப்பு செயலாளர் சித்திக்முகமது, மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.