பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் குழந்தை இயேசு ஆலயம் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது
அகில இந்திய காங்கிரஸ் கட்சி கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தியின் 51 வது பிறந்த தினம் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் அதன் தொடர் நிகழ்வாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் குழந்தை இயேசு ஆலய திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொள்வதாக இருந்தது சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை எனினும் அவரின் வழிகாட்டுதலின் படி காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
மேடைஇசைக் கலைஞர்களுக்குஅரிசி பருப்பு என்னை மளிகை சாமான்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் திருச்சியில் உள்ள ஆறு காப்பகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழங்கப்பட்டது இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது
இதில் மேடை இசைக் கலைஞர்கள்மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர் இசைக்கலைஞர்கள் உட்பட 200க்கும்மேற்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகள்வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்ஆதிபகவான் அறக்கட்டளை நிர்வாகஅறங்காவலரும், காங்கிரஸ் கட்சியின்இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுதுணைத் தலைவருமான கீர்த்தனாஆகாஷ், காங்கிரஸ் கட்சியின் மாநிலபொதுச் செயலாளர் வழக்கறிஞர்சரவணன், கலைப்பிரிவு மாநிலதுணைத்தலைவர் பெஞ்ஜமின்இளங்கோவன், அகில இந்தியகாங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரன்,மாநில துணைத்தலைவர் மன்சூர் அலி,சிகரம் பல்நோக்கு சேவை மையஇயக்குனர் சுரேஷ், ஏ டூ எசட் ஈவன்ட்மேனேஜ்மென்ட் தலைவர் ராபின்பேட்ரிக்ஸ், காங்கிரஸ் கட்சி மகளிரணிஷீலா, சரவணன், பஞ்சாயத்து ராஜ்மாவட்டதலைவர்அண்ணாதுரை, ஜெயம்கோபி,பிரேம்,இருதயராஜ்,மணிவேல் உள்பட காங்கிரஸ் கட்சிநிர்வாகிகள் இசைக்கலைஞர்கள்ஏராளமானோர் கலந்து கொண்டனர்.