திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
திருச்சி.பிப்.26: அதிமுக கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் R.மனோகரன், கழக அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் T.P.பூனாட்சி, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், கழக மகளிரணி இணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, கழக பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா சின்னசாமி மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.